திருப்போரூரில் வீராணம் குடிநீர் குழாய் ஓட்டை சரிசெய்யும் பணி

72பார்த்தது
திருப்போரூரில் வீராணம் குடிநீர் குழாய் ஓட்டை சரிசெய்யும் பணி
கடலுார் மாவட்டம், வீராணம் ஏரியில் இருந்து, சென்னைக்கு ராட்சத குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், கேளம்பாக்கம் - வண்டலுார் சாலை, புதுப்பாக்கம் வழியாக செல்லும் வீராணம் குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக வெளியேறியது. இதை சரிசெய்ய முதல்கட்டமாக, சென்னைக்கு வரும் குடிநீர் உடனடியாக நிறுத்தப்பட்டது.

உடைப்பு ஏற்பட்ட 1, 877 மி. மீ. , விட்டம் கொண்ட குழாயை சரிசெய்யும் பணியில், தொழிலாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

குழாயில் உள்ள தேங்கிய தண்ணீரை, ராட்சத மோட்டார் வாயிலாக வெளியேற்றி வருகின்றனர். குழாயில் தேங்கும் தண்ணீரை முழுமையாக வெளியேற்றிய பிறகு, குழாய் உடைப்பு சரிசெய்யப்படும் எனத் தெரிகிறது. குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக சென்னையில், பல்வேறு பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுவதாக தெரிகிறது.

மேலும், இந்த குழாய் உடைப்பால் மேற்கண்ட சாலை ஓரத்தில் ராட்சத மோட்டாரின் டிராக்டரை நிறுத்தியதாலும், குழாய் இணைப்பு பள்ளத்தாலும், இச்சாலையில் போக்குவரத்து இடையூறும் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி