தாம்பரத்தில் நகரும் மின் படிகள் பழுது முதியவர்கள், பெண்கள் அவதி

566பார்த்தது
தாம்பரத்தில் நகரும் மின் படிகள் பழுது முதியவர்கள், பெண்கள் அவதி
தாம்பரத்தில், பொதுமக்களின் வசதிக்காக, பேருந்து-, ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 'எஸ்கலேட்டர்' எனும் நகரும் மின் படிகளுடன் கூடிய நடைமேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

ரயில் நிலையம் மார்க்கமாக இறங்குவதற்காக போடப்பட்டுள்ள நகரும் படிகள் இயக்கம் பழுதாகி உள்ளது. இதனால், முதியவர்கள், பெண்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

தினம் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் இடத்தில், நகரும் படிகள் பழுதாகி இரண்டு நாட்கள் ஆகியும், அதை சரிசெய்யாமல், அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.

நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தலையிட்டு, நகரும் படிகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி