செங்கல்பட்டு மாவட்டத்தில் கல்வி சுற்றுலா துவக்கம்

59பார்த்தது
கோடை விடுமுறை முடிந்து கடந்த திங்கட்கிழமை (ஜுன்-2) அன்று தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் பள்ளி திறந்தவுடன் மாணவர்களுக்கு புதிய பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக படிப்பில் கவனம் செலுத்தும் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க இந்த கல்வி ஆண்டு தொடக்கத்திலேயே அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் சுற்றுலா அழைத்து செல்ல பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நெம்மேலி, கேளம்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம், கோவளம், மாம்பாக்கம், மானாமதி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 2000 பேர் தனித்தனி வேன்களில் முட்டுக்காடு தக்ஷணசித்ரா கலைப்பண்பாட்டு மையத்திற்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். அங்கு தமிழ்நாட்டில் உள்ள பழங்கால நாட்டு ஓடுகளால் வடிவமைக்கப்பட்ட செட்டிநாடு அரண்மனை வீடுகள், மரத்தால் ஆன கேரளா வீடுகள், ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் வீடுகள், பழங்கால பொருட்கள் ஆகியவற்றை 50 ஏக்கர் பரபரப்பளவில் உள்ள தக்ஷணசித்ரா கலை பண்பாட்டு மையத்தில் சுற்றி பார்த்து வந்து ரசித்தனர். மாணவர்களுடன் வந்திருந்த அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளின் மன அழுத்தத்தை
போக்கும் வகையில் பழங்கால வீடுகள், அதை எப்படி பயன்படுத்தினர், பழங்கால மக்களின் வாழ்வியல் முறைகளை கதை அம்சங்களுடன் எடுத்து கூறினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி