மதுராந்தகத்தில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய திமுக

70பார்த்தது
கலைஞர் அவர்களின் 102வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி, க. சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய கழக செயலாளர் படாளம் சத்யசாய் அவர்கள் தலைமையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழாவையொட்டி மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் இன்று பிறந்த ஏழு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் பரிசு பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ அவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து பரிசு பெற்றவர்களை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் குமார் ஒன்றிய செயலாளர் பொன்சிவக்குமார், நகர மன்ற தலைவர் மலர்விழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி