செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொண்ட தொழுநோயாளி. நில தகராறில் தனது குடம்பத்தை தாக்கியதாக குமுறல். ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி.
சென்னை அடுத்த திரிசூலம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி என்பவரது மகன் பாபு தொழுநோயாளி திரிசூலம் இராமலிங்க நாயனார் வைத்தியர் தெரு பகுதியில் வசித்து வருகிறார்.
நிலதகராறு காரணமாக பல்லாவரம் காவல்நிலையம் , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளார்.
இந்நிலையில் காவல்நிலையத்தில் மனு அளித்து நடவடிக்கை இல்லாத நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு நாள் அன்றும் பலமுறை மனு அளித்துள்ளார்.
மேலும் நிலதகராறு காரணமாக பக்கத்து வீட்டு காரர்கள் தனது குடும்பத்தை தாக்கி வருவதால் செய்வதரியாது மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொண்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழுநோயால் பாதிக்கபட்ட நபர் தீயிட்டு கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.