தமிழகம் முழுதும் உள்ள சுகாதார துறை ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் தங்களின் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்க, தென் மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்டோர், வாகனங்களில் சென்னை நோக்கி சென்றனர்.
அவர்களை, செங்கல்பட்டு மாவட்ட போலீசார், செங்கல்பட்டு, மறைமலை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி களில் தடுத்து நிறுத்தி, கைது செய்து தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர்.
இந்நிலையில், தேனி மற்றும் திருச்சி மாவட்டங்களில் இருந்து வந்த, 50க்கும் மேற்பட்ட பெண் மருந்துவ ஒப்பந்த ஊழியர்கள், போலீசார் கைது செய்ததை கண்டித்து, செங்கல்பட்டு -- தாம்பரம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊதிய உயர்வு, நிரந்தர பணி, பி. எப். , இ. எஸ். ஐ. , வழங்க வேண்டும், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் பணி நேரத்தில் விபத்தில் மரணமடைந்த சரண்யா என்ற பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட, 16 அம்ச கோரிக்கைகளைவலியுறுத்தி கோஷமிட்டனர்.
அவர்களை கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்த போலீசார், மாலையில் அவர்களை சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பினர்.