வையாவூர் பெருமாள் கோவிலில் ஏழை எளிய மக்களுக்கு கல்யாணம்

77பார்த்தது
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலை துறை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் திருக்கோவில்கள் சார்பில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச திருமணங்களை நடத்தி வைக்க உத்திரவிட்டுள்ளார்.

அதன்படி திருமணம் செய்து கொள்ளும் மணமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு குடும்ப சூழ்நிலை குறித்து ஆய்வு செய்து தேர்வு செய்யப்பட்ட தகுதியான மணமக்கள்
ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலை துறையின் சார்பில் இன்று பட்டுச்சேலை, பட்டு வேட்டி, கைக்கடிகாரம், தங்கத் தாலி, உள்ளிட்டவைகள் வழங்கி பிரசித்தி பெற்ற வையாவூர் பிரசன்னா வெங்கடேச பெருமாள் திருக்கோவில் வளாகத்தில் செயல் அலுவலர் மேகவண்ணன், ஒன்றிய செயலாளர் படாளம் சத்தியசாய்,
அறங்காவலர் குழு தலைவர் தினேஷ் ஏழுமலை , ஆகியோர் முன்னிலையில்
திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

பின்னர் திருமணம் செய்து கொண்ட ஜோடிகளுக்கும் 75ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கட்டில், பீரோ, மெத்தை உள்ளிட்ட 29 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

திருமண விழாவில்
மணமகன், மணமகள் வீட்டாரும், அறங்காவலர் குழு நிர்வாகிகள், திமுகவினர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

தொடர்புடைய செய்தி