காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் தாலுகாவில், ஸ்ரீபெரும்புதுார் ஆர். டி. ஓ. , சரவண கண்ணன் தலைமையில் நேற்று ஜமாபந்தி நடந்தது.
முதல் நாளான நேற்று, படப்பை உள் வட்டத்திற்குட்பட்ட, அமரம்பேடு, நடுவீரப்பட்டு, மணிமங்கலம் உள்ளிட்ட 15 ஊராட்சிகளுக்கான ஜமாபந்தி நடந்தது. இதில், ஏராளமானோர் பங்கேற்று, புதிய ரேஷன் கார்டு, வீட்டுமனை பட்டாஉள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு மனுக்கள் வழங்கினர்.
இதை தொடர்ந்து, 17, 18ம் தேதி செரப்பணஞ்சேரி உள் வட்டம், 19ம் தேதி மாங்காடு உள் வட்டம், 23ம் தேதி கொளப்பாக்கம் உள் வட்டம், இறுதி நாளான 24ம் தேதி குன்றத்துார் உள் வட்டத்திற்குட்பட்ட ஊராட்சிகளுக்கான மனுக்கள் பெறப்பட்டு, தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில், ஸ்ரீபெரும்புதூர் எம். எல். ஏ. , செல்வ பெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்ட சேர்மன் மனோகரன், குன்றத்துார் தாசில்தார் நாராயணன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.