மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக கன மழை
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளான மதுராந்தகம் மேல்மருவத்தூர் கருங்குழி சித்தாமூர் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழையானது பொழுது வருகிறது.
மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழையானது பெய்து வருவதால் இப்பகுதிகளில் தற்போது வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது.