காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மண்ணூர் கிராமத்தில் உள்ள பெட்டிக் கடைகளில், ஸ்ரீபெரும்புதூர் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், மண்ணூர் அம்பேத்கர் தெருவில் உள்ள பெட்டிக் கடையில், ஹான்ஸ், கூலீப், விமல் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, 30,000 ரூபாய் மதிப்புள்ள, 26 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளர் முனுசாமி (44), என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.