வண்டலுார் பூங்காவில், கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த, 'விஜயன்' என்ற வங்கப்புலி, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தது.
வண்டலுார் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த விஜயன், 21, என்ற ஆண் வங்கப்புலி, ஜன. , 24ம் தேதி முதல், உணவு உட்கொள்வதை குறைத்தது.
புலியின் ரத்தத்தை ஆய்வு செய்ததில், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக் கழகத்தின் ஆலோசனையுடன், சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும், வயிறு இறக்கம் ஏற்பட்டு சோர்வாக இருந்த வங்கப்புலிக்கு, பூங்கா மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு, 9: 00 மணிக்கு, புலி இறந்தது. பின், புலியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.