செங்கல்பட்டு: அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் பலி

0பார்த்தது
செங்கல்பட்டு: அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் பலி
செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அடுத்த பொலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன் (27). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று அவருக்குச் சொந்தமான 'ஸ்பிளெண்டர் பிளஸ்' பைக்கில், மதுராந்தகம் நோக்கிச் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். அப்போது மதுராந்தகத்தில், தனியார் மதுபான ஆலை எதிரே, கங்காதரன் ஓட்டிச் சென்ற பைக் மீது, அடையாளம் தெரியாத வாகனம் வேகமாக மோதியுள்ளது. இதில் அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சென்ற மதுராந்தகம் போலீசார், கங்காதரன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி