கேளம்பாக்கம் அருகே கார் கவிழ்ந்து காரில் பயணம் செய்த மூன்று கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் இரண்டு மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் - படூர் புறவழி சாலையில் புதியதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் அருகே கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் காரில் பயணம் செய்த கேளம்பாக்கம் செட்டிநாடு சட்ட கல்லூரியில் பயிலும் 3 , 4 ஆம் ஆண்டு பயிலும் சட்ட கல்லூரி மாணவர்கள் ஐந்து மாணவர்களில் இரண்டு மாணவிகள் உட்பட ஒரு மாணவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்தனர் மேலும் ஒரு மாணவன் ஒரு மாணவி பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் , விபத்துக் குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.