சங்கையில் விசிக கூட்டத்தில் மயங்கி விழுந்த மாவட்ட செயலாளர்

67பார்த்தது
மறைமலைநகர் அருகே நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பெண் மாவட்ட செயலாளர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு


செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே தனியார் திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதசார்பின்மை காப்போம் என்ற பேரணி வெற்றிபெற ஒருங்கிணைந்த சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் மண்டல சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது

அப்போது கட்சியின் தலைவர் திருமாவளவன் தாமதமாக வந்ததால் நீண்ட நேரமாக நிர்வாகிகள் மண்டபத்தில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது

அப்போது எதிர்பாராத விதமாக ஸ்ரீபெரும்புதூர் மாவட்ட செயலாளர் மேனகா மோகன் திடீரென மூச்சு திணறி மயங்கி விழுந்தார் அப்போது அங்கு இருந்த விசிக நிர்வாகிகள் அவரை தூக்கிச் சென்று 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில்
அனுமதித்தனர்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் மூச்சு திணறி பெண் மாவட்ட செயலாளர் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி