இதுதான் எனது வேண்டுகோள் உங்கள் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என திருவிடந்தையில் வீடியோ வெளியிட்ட அன்புமணி ராமதாஸ்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிராமத்தில் மே பதினோராம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சித்திரை முழு நிலவு இளைஞர் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது இதனை ஆய்வு செய்துவிட்டு அன்புமணி ராமதாஸ் அவர்கள் உங்கள் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் அமைதியான முறையில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கட்டுப்பாடோடு இங்கே நீங்கள் வரவேண்டும் என தொண்டர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சொந்தங்களுக்கும் வன்னியர் சொந்தங்களுக்கும் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள் வைக்கிறேன் என வீடியோ வெளியிட்டுள்ளார்.