மதுராந்தகம் வட்டாரத்தில், 'மக்களுடன் முதல்வர் ' முகாம், நேற்று வேடந்தாங்கல் ஊராட்சியில் துவங்கியது.
இம்முகாமில், வருவாய், ஊரக வளர்ச்சி, கூட்டுறவு, வீட்டு வசதி, மாற்றுத்திறனாளிகள் நலம், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலம், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மின் வாரியம் உள்ளிட்ட துறையினர் பங்கேற்றனர்.
இதில், உத்திரமேரூர் தி. மு. க. , - எம். எல். ஏ. , சுந்தர், வட்டாட்சியர் துரைராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானபிரகாசம் உள்ளிட்டோர் பங்கேற்று, மக்களிடம் மனுக்களை பெற்றனர்.
இதில், பொதுமக்களிடமிருந்து, 940 மனுக்கள் வரப்பெற்றன.
இதில், வேடந்தாங்கல், சித்தாத்துார், பாப்பநல்லுார், வளையப்புத்துார் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, இலவச வீட்டு மனை பட்டா கேட்டு, 150க்கும் மேற்பட்ட மனுக்கள் வரப்பெற்றுள்ளன.