சிகிச்சைபெற்றுவந்தவர் மருத்துவமனை பின்புரம் பிணமாக மீட்பு

53பார்த்தது
செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தவர் மருத்துவமனைக்கு பின்புரம் பிணமாக மீட்பு.!!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த மானாமதி அழகு நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் தம்பிரான் வயது 50 இவர் இதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று இரவு வரை மூன்றாவது மாடியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்த நிலையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த அவர் இன்று காலை மருத்துவமனைக்கு பின்புறத்தில் சடலமாக கிடந்தார்

இதனை அடுத்து மருத்துவர்கள் அளித்த புகார் அடிப்படையில் செங்கல்பட்டு நகர காவல் துறையினர் விரைந்து வந்து உடலைப் பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மூன்றாவது மாடியில் சிகிச்சை பெற்று வந்த தம்பிரான் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி