செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், சிங்கபெருமாள்கோவில் ஊராட்சியில் ஆயிரக்கணக்கான வீடுகள், வணிக கட்டடங்கள், மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வங்கிகள் உள்ளன.
மேலும் புகழ்பெற்ற பழமையான பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. சிங்கபெருமாள்கோவிலைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு, தினமும் வந்து செல்கின்றனர்.
இங்கு அனுமந்தபுரம் சாலை -- ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பு மற்றும் மண்டப தெரு சந்திப்புகளின் ஓரம், கழிவுநீர் வழிந்து ஓடி கால்வாயில் தேங்குகிறது. இதன் காரணமாக இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் அவதியடைந்து வருகின்றனர். இதனால், நோய் தொற்று ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.