சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சோத்துப்பாக்கத்தில், துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் 'நம்ம ஊரு சூப்பரு' விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இந்நிகழ்ச்சியில், துாய்மை காவலர்களுக்கான துணி மற்றும் உபகரணங்களை, சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரி வழங்கினார்.
துாய்மை
இந்தியா திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தலைமையில், 'எங்கள் கிராமம், எழில் மிகு கிராமம்' என்ற உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
பின், மட்கும் குப்பை, மட்கா குப்பையை தரம் பிரித்து வழங்குவோம், 'பிளாஸ்டிக்'கை தவிர்ப்போம் என, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, சோத்துப்பாக்கம் ஊராட்சி பகுதியில், 100க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பேரணியாக சென்றனர்.