தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து

54பார்த்தது
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அவ்வப்பொழுது வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்‌.


அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள ஒழுபாபாக்கம் என்ற இடத்தில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சென்று கொண்டிருந்த கார் திடீரென சாலை ஓரம் இருந்தால் டீக்கடையில் வாகனத்தை ஓரம் கட்ட, ஓட்டுநர் முயற்சி செய்துள்ளார்.


அப்போது முறையாக சிக்னல் எதுவும் கொடுக்காமல் கார் சாலை ஓரத்தில் நிற்க முயற்சி செய்துள்ளது. இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அவ்வழியாக வந்த அடுத்த இரண்டு கார்கள் முன்னே சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது. இதேபோன்று அதன் பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படாமல் உயிர் தப்பினர். இதன் காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பாக மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து போக்குவரத்து சரி செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி