மாமண்டூர் கிராமத்தில் ஸ்ரீ ஸ்ரீரடி விஜய சாயிநாதர் ஆலயத்தில் மண்டல அபிஷேக நிறைவு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மாமண்டூர் கிராமத்தில் ஸ்ரீ ஸ்ரீரடி விஜய சாயிநாதர் ஆலயம் புதியதாக அமைக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி இந்தக் கோவிலின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீ சீரடி விஜய சாய்நாதருக்கு 48 நாட்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது இதனை தொடர்ந்து மண்டல அபிஷேக நிறைவு விழாவான இன்று சீரடி விஜய சாய்நாதருக்கு சிறப்பு அபிஷேக செய்யப்பட்டு மகாதிபாரதனை நடைபெற்றது.
இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.