காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், நகைக்கடையில் ஊழியராக பணியாற்றுபவர் மீனாட்சி, 40. இவர், நேற்று மதியம், கடையில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அங்கு வந்த மர்ம நபர், மீனாட்சியின் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவி, தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றார். மீனாட்சி கூச்சலிட்டதைக் கேட்டு, அப்பகுதியில் இருந்தவர்கள் அந்த மர்ம நபரைப் பிடித்து, குன்றத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சத்யா, 45, என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.