கொடூர ரயில் விபத்து -கர்ப்பிணி பெண் உட்பட இருவர் உயிரிழப்பு

75பார்த்தது
கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா (28). கேரளா மாநிலம் மலப்புறம் பகுதியை சேர்ந்தவர் முகமது ஷரீப் (35). இருவரும் நண்பர்களுக்காக பழகி வந்துள்ளனர்‌. இந்தநிலையில் இருவரும் கேரளாவில் இருந்து சென்னைக்கு வேலை தேடி சென்னை வந்துள்ளனர். அப்போது கூடுவாஞ்சேரி அருகே உள்ள நண்பர் ஒருவரின் உதவியுடன், வேலை தேடிவருவதாக கூறப்படுகிறது.


இந்தநிலையில் இரவு 8 மணி அளவில் பொத்தேரி கூடுவாஞ்சேரிக்கு இடையே சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரயில்வே தண்டவாளத்தில் கூடுவாஞ்சேரி அருகே உள்ள தனது நண்பர் வீட்டுக்குச் செல்ல, பேசியப்படி நடந்து சென்றுள்ளனர்.


அச்சமயம் அவ்வழியாக வந்த சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரயிலில் அடிபட்டு , இருவருக்கும் தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.


இந்த விபத்து நடந்த சில நிமிடங்களில், முகமது ஷரீஃப் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்துள்ளார். வீட்டுக்கு போராடிக் கொண்டிருந்த ஐஸ்வர்யாவை நிறுத்து அருகில் இருந்த, பொத்தேரி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து ஐஸ்வர்யா சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்‌.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி