காஞ்சிபுரம் மாவட்டம் சிறீபெரும்புதூர் ஒன்றியம் மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஒரகடம் செல்லும் சாலையில் உள்ளது. இவ்வழியே நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. ஒரகடம் சிப்காட் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் முக்கிய சாலையாகும். பண்ருட்டி, மேட்டுப்பாளையம், குண்ணம், எச்சூர் கிராமங்களின் மக்கள் இந்த சாலையைப் பயன்படுத்தி செல்கின்றனர். இந்நிலையில், இயற்கை எரிவாயு வினியோகம் செய்ய, இந்த சாலையோரம் பைப்லைன் போடப்பட்டு வருகிறது. இதற்காக, தோண்டப்பட்ட பள்ளத்தில் தடுப்பு இல்லாமல் உள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள், எதிரே வரும் கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போது, பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, வாகன ஓட்டிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, விபத்து ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், தடுப்பு அமைத்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.