செங்கல்பட்டில் வரும் 4ம் தேதி, மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டி நடக்கிறது. இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், வரும் 4ம் தேதி காலை 7:00 மணிக்கு, திருப்போரூர் கூட்டுச்சாலையில், அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் மாணவர்களுக்கு துவக்கப்பட உள்ளன.
இதில், முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீரர் மற்றும் வீராங்கனையருக்கு, தலா 5,000, 3,000, 2,000 ரூபாய் வழங்கப்படும். 4 முதல் 10 இடங்களை பெறும் வீரர் மற்றும் வீராங்கனையருக்கு, தலா 250 ரூபாய் வழங்கப்படும். சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, 7401703461 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.