மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் புதிய சாலை பூமி பூஜை போடும் பணி காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடமலைபுத்தூர் கிராமத்தில் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஃபேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி ஒன்றிய கவுன்சிலர் பொன்மலர், தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, ஒன்றிய பெருந்தலைவர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் வசந்தா கோகுலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து மின்னல் சித்தாமூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி அவர்களின் ஏற்பாட்டில் முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்டோருக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது.