பழுதாகி நின்ற வாகனத்தை காவலர் ஒருவர் தள்ளிய காட்சி வைரல்

64பார்த்தது
சிங்கப்பெருமாள் கோவில் அருகே சாலையில் பழுதாகி நின்ற வாகனத்தை காவலர் ஒருவர் தள்ளிய காட்சி இணையத்தில் வைரல்.


சென்னை புறநகர் பகுதியான சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஒரகடம் செல்வதற்காக லோடு வாகனம் வந்து கொண்டிருந்தது
அப்போது எதிர்பாராத விதமாக நடு வழியிலேயே பழுதாகி லோடு வாகனம் நின்றது.

அப்போது அங்கு போக்குவரத்து நெரிசலை சீர் செய்து கொண்டிருந்த போக்குவரத்து காவலர் மோகன் என்பவர் சாலையில் பழுதாகி நின்ற வாகனத்தை பின்னால் தள்ளி உதவி செய்தார்.

இந்த காட்சியை அந்த வழியாக சென்ற ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளத்தில் காவல்துறையில் ஒரு ஈரம் என்ற தலைப்பில் பதிவு செய்திருந்தார் அந்த காட்சி தற்போது பலரால் பகிரப்பட்டு இணையத்தில் வேகமாக பரவி அதேபோல் போக்குவரத்து காவலர் மோகன் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பிலும் வாகன ஓட்டிகள் சார்பிலும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.!

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி