சென்னை அடுத்த ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் முசாமில் அகமது, 39. இவர், பதிவாளர் அலுவலகம் முன், கடந்த 17ம் தேதி கார் நிறுத்தி இருந்தார். கண்ணாடியை உடைத்து 6 லட்சம் ரூபாயை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பினர். இது குறித்து, மணிமங்கலம் போலீசில் புகார் அளித்தார். இதற்கு மணிமங்கலம் காவல் நிலைய போலீசார்கள் சதிஷ்குமார், ஏழுமலை ஆகியோர், புகார்தாரரிடம் 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளனர். இந்த புகாரில் போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக், இருவரையும் சஸ்பெண்ட் செய்தார்.