செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா சிட்டியில், மோட்டார் வாகனங்களின் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலை வளாகத்தில் உள்ள மின் ஒயர்கள் மற்றும் காப்பர் ஒயர்களை மர்ம நபர்கள் திருடி வந்தனர். நேற்று முன்தினம் மாலை மூன்று மர்ம நபர்கள் தொழிற்சாலை வளாகத்தில் புகுந்து, காப்பர் ஒயர்களை திருட முயன்றனர்.
அப்போது, தொழிற்சாலை காவலாளிகள், அவர்களை மடக்கி பிடித்து செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், திருப்போரூர் அடுத்த அம்மாபேட்டையைச் சேர்ந்த ஜெயசூர்யா, 32, செய்யூரைச் சேர்ந்த கார்த்திக், 28, தூத்துக்குடியைச் சேர்ந்த சண்முகராஜன், 30, என்பது தெரியவந்தது.
இவர்கள், தொடர்ந்து தொழிற்சாலைகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. தனியார் தொழிற்சாலை நிர்வாகம் அளித்த புகாரின்படி, வழக்கு பதிந்த போலீசார், மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.