சாலையில் வழியும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு அபாயம்

61பார்த்தது
சாலையில் வழியும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு அபாயம்
காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், கோவிலை ஒட்டியுள்ள கிழக்கு மாட வீதியில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, இரு இடங்களில், 'மேன்ஹோல்' வழியாக, கழிவு நீர் சாலையில் வழிந்தோடுவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால், அவ்வழியாக செல்லும் பொதுமக்களும், கோவிலுக்கு செல்லும் பக்தர்களும், முகம் சுளித்தபடியே செல்கின்றனர். மேலும், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கிழக்கு மாட வீதியில், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி