பௌந்தங்கரணையில் புதிய நியாய விலைக் கடை திறப்பு விழா

71பார்த்தது
புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நியாய விலை கடையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் திறந்து வைத்தார்



செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பௌந்தங்கரணை கிராமத்தில் நீண்ட நாள் கோரிக்கையான நியாய விலை கடை அமைத்து தரக்கூறி மக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர் அதன் பேரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டி முடிக்கப்பட்டது இன்று மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முதுகரை கார்த்திகேயன், இவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு பொது விநியோக பொருட்கள் அரிசி சர்க்கரை எண்ணெய் வழங்கி நியாய விலை கடையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தனர் இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி