கருங்குழி பேரூராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி
செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மேலவலம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி
பேரூராட்சி செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பேரூராட்சி மன்ற தலைவர் தசரதன் அவர்கள் கலந்து கொண்டு நாவல் மரம், வேப்பமரம், குங்குவ மரம், மகிழ மரம் உள்ளிட்ட நிழல் தரும் மரக்கன்றுகளை நட்டு வைத்து இயற்கை பாதுகாப்பு குறித்தும் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பது குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் தினேஷ் விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கருங்குழி பேரூராட்சியானது பல்வேறு மியா வாக்கி குறுங்காடுகளை உருவாக்கி இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாத்ததால் தமிழகத்தில் நம்பர் ஒன் பேரூராட்சி என தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் திருக்கரங்களால் பரிசு பெற்றது குறிப்பிடப்பட்டது.