மதுராந்தகம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் க. சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு!
காஞ்சி தெற்கு மாவட்டம் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு என்ற சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் கொள்ளம்பாக்கம் கிராமத்தில் ஒன்றிய கழக செயலாளர் பொன்சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, தலைமை கழக பேச்சாளர் பழனி, மதுராந்தகம் தொகுதி பார்வையாளர் சாரதிமணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டு கழக அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினர்.
இந்த நிகழ்ச்சியில் இளைஞரணி அமைப்பாளர் தினேஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து திமுக நிர்வாகிகளுக்கு கை கடிகாரம், மகளிர்களுக்கு புடவை, விளையாட்டு உபகரணங்கள், இஸ்திரி பெட்டி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.