வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் பக்தர்கள் தரிசனம்

85பார்த்தது
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்பூதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இது அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலமாகும். பழமையான இத்திருக்கோயிலில் மாதந்தோறும் கிருத்திகை நாளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கமாகும். 

இங்கு வந்து வழிபடுவோருக்கு புதிய வீடு கட்டுதல், திருமணம், இழந்த பதவி, நலமான வாழ்வு ஆகியவை கிடைப்பதால் நாளுக்குநாள் பக்தர் வருகை அதிகரித்து வருகிறது. பகீரதன் எனும் அரசன் வந்து சுக்கிர வாரத்தில் முருகப் பெருமானை வழிபட்டு இழந்த இராஜ்ஜியத்தை பெற்றான். அதனால் இங்கு வெள்ளிக்கிழமை 6 வாரங்கள் வந்து வழிபடுவோருக்கு இழந்த செல்வங்கள், பதவிகள், சொந்த வீடு மனை ஆகியவை கிடைக்கும். 

தேவகுருவின் வழிகாட்டுதல்படி இந்திரன் மங்கள வாரத்தில் இத்தலத்திற்கு வந்து முருகப் பெருமானைப் பூசித்து இந்திராணியை மணந்தான். இது கல்யாண பிரார்த்தனை தலமாகவும் உள்ளது. 

அதனால் 6 செவ்வாய்க்கிழமைகள் இத்திருக்கோயிலுக்கு வந்து மாலைகள் சாற்றி முருகப்பெருமானைப் பூஜிப்பவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலில் பங்குனி கிருத்திகையும் செவ்வாய்க்கிழமையும் ஒன்றாக வந்ததால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

தொடர்புடைய செய்தி