காஞ்சியில் சாலை விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

67பார்த்தது
காஞ்சியில் சாலை விபத்தில் வாலிபர் உயிரிழப்பு
காஞ்சிபுரம் அடுத்த, முத்துவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலை, (35). இவர், சிங்காடிவாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவர், பணி முடித்து நேற்று (மே.9) காலை 7:00 மணியளவில், 'பஜாஜ் டிஸ்கவர்' இரு சக்கர வாகனத்தில், வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். 

கீழம்பி அருகே உள்ள தனியார் ஹோட்டல் எதிரே மழைநீர் கால்வாய் சுவரில் மோதி விழுந்தார். இதில், படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி ஜெயசித்ரா, பாலுச்செட்டிச்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார், திருமலையின் சடலத்தை மீட்டு, விபத்து எப்படி நடந்தது என விசாரித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்தி