அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4ல் துவங்கினாலும், காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் 22 முதல், அவ்வப்போது கோடை மழை பெய்தது.
இதனால், வெயிலின் தாக்கம் குறைந்து இருந்தது.
இந்நிலையில், சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், நேற்று முன்தினம் அதிகபட்சமாக 118 டிகிரி வெப்பநிலை பதிவானது.
இதனால், காஞ்சிபுரத்தில் வெளியில் நடமாடியோர், வீட்டில் முடங்கியோர் என, பல தரப்பினரும் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.
இரண்டாவது நாளாக நேற்றும், காஞ்சிபுரத்தில் 118 டிகிரி வெப்ப நிலை நிலவியது. இரு நாட்களாக காஞ்சிபுரத்தை வெயில் சுட்டெரித்து வருவதால், கோடை மழையை எதிர்பார்த்து, பகுதிவாசிகள் காத்திருக்கின்றனர்.