காஞ்சி வரதராஜஸ்வாமி வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றம்

69பார்த்தது
அருள்மிகு தேவராஜ் ஸ்வாமி திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவ பெருவிழா முன்னிட்டு இன்று அதிகாலை சுவாமி தீபாராதனையுடன் கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது. ஆழ்வார்கள் வேத மந்திரங்கள் முழங்க விமரிசையுடன் கொடியேற்றம் துவக்கி வைக்கப்பட்டது. வைகாசி பிரம்மோற்சவ பெருவிழா முக்கிய நிகழ்வாக உலகப்பிரசித்தி பெற்ற கருடசேவை (13) நாளை மறுநாள் அதிகாலை மற்றும் வரும் 17ம் தேதி திருத்தேர் நிகழ்வும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. பிரம்மோற்சவ பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையும் இணைந்து சிறப்பான முன்னேற்பாடுகளோடு செயல்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி