காஞ்சிபுரம் மாவட்டம் சின்னகாஞ்சிபுரம் சித்திவிநாயகர் பூந்தோட்டம் பகுதியில் இருந்து, சதாவரம் பகுதிக்குச் செல்லும் வழியில் உள்ள மொட்டைக்குளம், அப்பகுதி நிலத்தடிநீராதாரமாக விளங்குகிறது. வாகனப் போக்குவரத்து நிறைந்த இச்சாலையோரம் குளம் அமைந்துள்ளது. ஆனால், குளத்திற்குத் தடுப்புச்சுவர் இல்லாததால், இரவு நேரத்தில் குளத்தை ஒட்டியுள்ள சாலையில் செல்லும் இருசக்கர வாகனஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போது, குளத்தில் தவறிவிழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் வீட்டுப் பயோகக் கழிவுநீர் கலப்பதால், குளத்துத் தண்ணீர் மாசடைந்த நிலையில் உள்ளது. எனவே, மொட்டைக்குளத்திற்குத் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.