காஞ்சிபுரம் மாநகரத்தில் முக்கிய சாலைகளான மேற்குராஜ வீதி, சங்கர மடம் சாலை, பூக்கடை சத்திரம், பஸ்நிலைய சிக்னல் மற்றும் காமாட்சியம்மன் கோயில், காளிகாம்பாள் கோவில் என முக்கிய கோவில்களில் இருந்து உற்சவம் நடைபெறும் சாலைகளில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளது.
இந்த சாலைகள் இருசக்கர வாகனங்கள், ஷேர் ஆட்டோக்கள், பாதசாரிகள் மற்றும் கோவில்களுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் முக்கிய சாலைகளாகும். சாலையின் குறுக்கே திடீரென மாடுகள் திரும்பினால் விபத்துகள் ஏற்படும் நிலையில் சுற்றித் திரிவதால் மாநகராட்சி நிர்வாகம் மாடு உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தால் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.