திருக்கழுக்குன்றம் கல்வி வட்டார பள்ளிகளின் மாணவியர் பங்கேற்ற கைப்பந்து மற்றும் எறிபந்து போட்டிகளில், திருக்கழுக்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகள், மாவட்ட போட்டிக்கு தேர்வாகின.
இப்போட்டிகளை, வெங்கப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில், கல்பாக்கம் 'நெஸ்கோ' விளையாட்டு திடலில், நேற்று நடத்தப்பட்டன. இரண்டு போட்டிகளிலும், அரசு, தனியார் என, 10 பள்ளிகளைச் சேர்ந்த, 14, 17, 19 ஆகிய வயதிற்கு உட்பட்ட மாணவியர் பங்கேற்றனர்.
கைப்பந்து போட்டியின் 14, 19 வயது ஆகியபிரிவுகளில், திருக்கழுக்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், 17 வயது பிரிவில், கல்பாக்கம் அணுசக்தி மத்திய மேல் நிலைப் பள்ளி - 2ம் இடம்வென்றன.
எறிபந்து போட்டியின் 14 வயது பிரிவில், திருக்கழுக்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், 17, 19 ஆகியவயது பிரிவுகளில், கீரப்பாக்கம் பிளெஸ்சிங் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியும்வென்றன.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளிகளின் மாணவியர், மாவட்ட அளவில் நடத்தப்படும் போட்டியில் பங்கேற்பர்.