கார் மீது லாரி மோதி விபத்து இருவர் பலி

2237பார்த்தது
மதுராந்தகம் அருகே நள்ளிரவில் கார் மீது லாரி மோதல் ஒரு பெண்ஒரு பையன் உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்தில் இருவர் பலி ஐந்து பேர் படுகாயம். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் படாளம் என்ற இடத்தில் நள்ளிரவு மேல்மருவத்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மீது லாரி மோதல் காரில் பயணம் செய்த ஏழு பேரில் பார்வதி சச்சின் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஐந்து பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி