மதுராந்தகம் அருகே காரில் இருந்த ஆண் சடலத்தால் பரபரப்பு

66பார்த்தது
மதுராந்தகம் அருகே கேட்பாரற்று நின்று கொண்டிருந்த காரில் இருந்த ஆண் சடலத்தால் பரபரப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த திருச்சி To சென்னை தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக ஹோட்டல் ஹைவேன் எதிரே உள்ள காலி இடத்தில்

கடந்த இரு நாட்களாக கேட்பாரற்று நிலையில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது அந்த காரில் இறந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று இருந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காரில் இறந்த கிடந்த சடலத்தை பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

முதல் கட்ட விசாரணையில் இவர் அமல்ராஜ் (45) அமெரிக்காவிலும் அதன் பிறகு ஆந்திராவிடம் ஆயராக பணியாற்றி இருந்து உள்ளார் மதுராந்தகம் அருகே உள்ள அகிலி கிராமம் தான் இவரது சொந்த ஊர் தற்போது சோத்துப்பாக்கம் பகுதியில் குடியிருந்து வருவதாகவும் கிருஸ்வதுவ ஆலயத்தில் ஆயராக பணியாற்றி உள்ளார்


கார் முழுமையாக நான்கு கதவுகளும் அடைக்கப்பட்டு உள்ளே இறந்த நிலையில் காணப்படுவதால் மேலும் கைரேகை நிபுணர்களை வரவைத்து இவர் தானாக இறந்தாரா அல்லது இவரை யாரேனும் கொலை செய்துள்ளார்களா அல்லது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தா என பல கோணத்தில் மதுராந்த சம் போலீஸ் வழக்கப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி