செங்கல்பட்டில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா

58பார்த்தது
செங்கல்பட்டில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நேற்று முன்தினம் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பொதுமக்களிடம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் மனுக்கள் பெற்றார். 

நடவடிக்கை இதில், இலவச வீட்டுமனை பட்டா, மின்கம்பம் மாற்றம், சாலை வசதி, பேருந்து வசதி, பட்டா திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 406 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமைச்சர் உத்தரவிட்டார். மானியம் கலெக்டர் அருண்ராஜ், செங்கல்பட்டு தி.மு.க. எம்.எல்.ஏ. வரலட்சுமி, உள்ளிட்ட அனைத்துதுறை அதிகாரிகள் பங்கேற்றனர். 

அதன்பின், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், முருகமங்கலம் திட்டப்பகுதியில், 25 பயனாளிகளுக்கு, தலா 12.6 லட்சம் ரூபாய் என, மொத்தம் 3.01 கோடி ரூபாய் மதிப்பில், வீடு கிரயப்பத்திரங்கள், மூன்று பயனாளிகளுக்கு, 70 சதவீத மானியத்துடன் கூடிய பவர் டிரில்லர்களை அமைச்சர் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி