காப்பு காட்டுப்பகுதி அருகே கழிவு நீர் கொட்டி செல்வதால் - மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உயிர் இழக்கும் அபாயம்
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த செண்டிவாக்கம் காப்பு காட்டுப்பகுதி அருகே, மேல்மருவத்தூர் சோத்துப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் உணவகங்களில் இருந்து சேகரமாகும் கழிவு நீரை கொண்டு செல்லும் வாகனங்கள், காப்புக்காடு அருகே உள்ள தனியார் நிலத்தில் கழிவு நீரை கொட்டி செல்கின்றனர்.
அதனால், காப்பு காட்டில் உள்ள மான், நரி, முள்ளம்பன்றி, முயல், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள், கோடை காலத்தில் தண்ணீர் தேடி அலைவதால், கழிவு நீரை பருகி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
போலீசார் மற்றும் வனத்துறையினர் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.