நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, கிருஷ்ணாபுரம் முதலாவது தெருவைச் சேர்ந்தவர் ஆதிகேசவன், 65.
இவர், நேற்று காலை 10: 00 மணியளவில், வீட்டிலிருந்து 'பல்சர்' இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது, கூடுவாஞ்சேரி அடுத்துள்ள சீனிவாசபுரம் சிக்னலில் நின்றார்.
அப்போது, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி டூரிஸ்ட் மினி வேனை பழனி, 45, என்பவர் ஓட்டி வந்தார். அப்போது, சிக்னலில் நின்றிருந்த ஆதிகேசவன் மீது மோதியது.
இதில், படுகாயமடைந்த ஆதிகேசவன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கூடுவாஞ்சேரி
போக்குவரத்து புலனாய்வு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, மினி வேன் டிரைவர் பழனியை கைது செய்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.