ஸ்ரீபெரும்புதூரில் மின்கம்பத்தை அகற்றாமல் கால்வாய் பணி

60பார்த்தது
ஸ்ரீபெரும்புதூரில் மின்கம்பத்தை அகற்றாமல் கால்வாய் பணி
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், பால்நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பால்நல்லூர் கண்டிகை பகுதியில் 60 க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்குள்ள மாதா தெருவில், மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடியது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். எனவே, இப்பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

இதையடுத்து, ஆறு மாதங்களுக்கு முன், பல லட்சம் ரூபாய் செலவில், மாதா கோவில் தெருவில் புதிதாக மழைநீர் கால்வாய் மற்றும் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், அங்கு கால்வாய் நடுவே உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்காமல், அப்படியே மழைநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்ட மழைநீர் கால்வாயில் 3 மின் கம்பங்கள் உள்ளதால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், முறையாக வெளியேற வழியில்லாமல் கால்வாயில் தேங்குகிறது. 

இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு கடித் தொல்லையில் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், மழைக்காலங்களில் வெள்ளநீர் கால்வாயில் செல்வதில் சிக்கல் ஏற்படும். மழைநீர் வீடுகளில் புகுந்து வெள்ளப் பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி