கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு இன்று நந்தி பகவானுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு விசேஷ திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு தொடர்ந்து வண்ண மலர்களால் நந்தி பகவான் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.