கள்ளக்குறிச்சி: மாற்றுத்திறனாளிகள் தின விழா

83பார்த்தது
கள்ளக்குறிச்சி: மாற்றுத்திறனாளிகள் தின விழா
கள்ளக்குறிச்சி அடுத்த நாகலுார் சமூக நல மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடத்தப்பட்டது. 

நாகலுார் தனியார் கட்டிடத்தில் நடந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் இளையராஜா, சமூக நல மாற்றுத்திறனாளிகள் நல சங்க தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள், அதனை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து கூறப்பட்டது.

தொடர்புடைய செய்தி