கிணற்றில் விழுந்து விவசாயி உயிரிழப்பு

68பார்த்தது
உளுந்துார்பேட்டை அடுத்த வெள்ளையூர் காலனியை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் அம்மாசி, 55; விவசாயி. இவர், நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் குருநாதனின் விளைநிலத்தில் கட்டப்பட்டுள்ள பசுமாட்டிற்கு தண்ணீர் வைத்து வருவதாக குடும்பத்தினரிடம் தெரிவித்துவிட்டு சென்றார். தொடர்ந்து, நீண்ட நேரமாகியும் அம்மாசி வராததால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை 7 மணியளவில் குருநாதன் விளைநிலத்திற்கு சென்று தண்ணீர் பாய்ச்சுவதற்காக கிணற்றினை எட்டி பார்த்த போது அம்மாசி இறந்த நிலையில் கிணற்றில் மிதந்துள்ளார். இதுபற்றி தகவலறிந்த உளுந்துார்பேட்டை தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இது குறித்த புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி