கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் நேற்று சின்னசேலம் நண்பர்கள் குழு மற்றும் மகாபாரதி இன்ஜினியரிங் கல்லூரி சார்பில் 29 ஆவது, தென்னிந்திய அளவிலான கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது. இறுதிப் போட்டியில் ஆண்கள் அணி பிரிவில் சின்னசேலம் அணி முதலிடம் பிடித்தது. பெண்கள் பிரிவில் சின்னசேலம் அணி இரண்டாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்றவர்களுக்கு மகாபாரதி கல்லூரி தாளாளர் பரிசுகளை வழங்கினார்.